Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி ராம்ஜிநகர் கே. கள்ளிக்குடி கிராமத்தில் என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த அரசு தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. என்.ஆர். கல்வி நிறுவனங்களின் குழும தலைவர் விஜயாலயன் தலைமை வகித்தார். இதில் நடந்து முடிந்த அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் மாணவ மாணவிகளின் பெற்றோரும் பங்கேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ரங்கநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவி உமா நன்றி கூறினார்.